அதிரடி நடவடிக்கைப் படையின் தலைமை ஆய்வாளராக அன்னி ஆபிரகாமும், பீகார் துறையின் தலைமை ஆய்வாளராக சீமா துண்டியாவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மத்திய சேமக் காவல் படையில் முதல் மகளிர் படைப்பிரிவு எழுப்பப்பட்டது முதல் கடந்த 35 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த நியமனமானது மேற்கொள்ளப் பட்டு உள்ளது.
அதிரடி நடவடிக்கைப் படைக்கு ஒரு பெண் தலைமை ஆய்வாளர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.
1986 ஆம் ஆண்டில் பெண்களைப் போரில் ஈடுபடுத்திய முதல் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) மத்திய சேமக் காவல் படை ஆகும்.
15 படைப்பிரிவைக் கொண்ட அதிரடி நடவடிக்கைப் படைப் பிரிவானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவர எதிர்ப்பு, எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் அதிக பாதிப்பு மிக்க சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.