மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் 2020 ஆம் ஆண்டு சக்தி குற்றவியல் சட்டங்கள் (மகாராஷ்டிரா திருத்தம்) மசோதா, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாலியல் வன்முறை வழக்குகளுக்கு மரணத் தண்டனையை விதிக்கப் பரிந்துரைத்துள்ளது.
இதில் ஒரு புகாரினைப் பதிவு செய்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அந்தப் புகாரின் மீதான ஆய்வினை முடிப்பதற்கு காலவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய மசோதாவின் விதிமுறைகள்படி பெண்கள் மீது வன்முறை மேற் கொண்ட தனிநபர்கள், ஒரு முன்னெச்சரிக்கை தடுப்புப் பிணையினைப் பெறுவதற்கு இருந்த வாய்ப்பினை இது ரத்து செய்தது.
இது குறித்து மூத்த வழக்கறிஞர்களிடமிருந்து ஆலோசனை பெற்ற பிறகு இந்தப் புதிய பரிந்துரைகள் இதனை ரத்து செய்தன.
பொய்யான பாலியல் புகார்களை அளிப்பவர்களுக்கு குறைந்தது ஒரு வருட சிறைத் தண்டனை முதல் அதிகபட்சமாக மூன்று வருட சிறைத் தண்டனை வரையும், 1 லட்சம் அபராதமும் விதிப்பதற்கான விதிமுறைகளை இந்த மசோதா உருவாக்கியது.