கம்போடியாவின் கெமர் பேரரசின் அறியப்படாத பண்டைய "தொலைந்த நகரத்தை" ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக அடையாளம் கண்டுள்ளனர்.
மகேந்திரபர்வதா ஆனது சில சமயங்களில் 'கம்போடியாவின் தொலைந்த நகரம்' என்று அழைக்கப் படுகின்றது. இது கெமர் பேரரசின் ஆரம்பகாலத் தலைநகரமாக விளங்கியது.
கெமர் பேரரசானது தென் கிழக்கு ஆசியாவின் ஒரு இந்து - புத்த ஆட்சியாகும். இதன் ஆட்சி பொதுவான சகாப்தத்தின் 9 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.
வான்வழி லேசர் ஸ்கேனிங்கைப் (airborne laser scanning - Lidar) பயன்படுத்தியதன் மூலம் இந்தக் கண்டுபிடிப்பு சாத்தியமானது.
லிடார் ஆனது தாவரங்களைப் 'பார்ப்பதற்கு' தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது. இது வனப் பரப்பின் உயர் தெளிவுத்திறன் கொண்ட மாதிரிகளை வழங்குகின்றது.