TNPSC Thervupettagam

மங்கள்யான் ஆய்வுக் கலம்

October 10 , 2022 651 days 423 0
  • இந்தியாவின் செவ்வாய்க் கிரகச் சுற்றுக் கலமானது, கோள்களுக்கிடையேயான ஆய்வுப் பணியில் மேற்கொண்ட 8 ஆண்டுகள் நீண்ட நெடும் ஆய்வுப் பணியை நிறைவு செய்ததையடுத்து ஓய்வு பெற்றுள்ளது.
  • இது 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டு, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.
  • இது வெறும் 6 மாதங்கள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது, என்றாலும் 8 நீண்ட நெடும் ஆண்டுகள் காலத்திற்கு இது செயல்பாட்டில் இருந்தது.
  • இந்தியாவின் மங்கள்யான் கலத்திற்கு முன்னதாக, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் மட்டுமே செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்தன.
  • மேற்பரப்பு புவியியல், புற வடிவவியல், வளிமண்டல நடவடிக்கைகள், மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் வளிமண்டல வெளியேற்றச் செயல்முறை போன்றவை உட்பட செவ்வாய்க் கிரக  நிலப்பரப்புகளை ஆய்வு செய்ய உதவும் வகையிலும் மங்கள்யான் ஒரு மாபெரும் மைல்கல் சாதனையாகும்.
  • மங்கள்யான் இந்தப் பணிக்காக பின்வரும் 5 கருவிகளைப் பயன்படுத்தியது.
    • செவ்வாய்க் கிரக வண்ண ஒளிப்படக்கருவி (MCC)
    • வெப்ப அகச்சிவப்பு உருவரைவு நிறமாலைமானி (TIS)
    • செவ்வாய்க் கிரகத்திற்கான மீத்தேன் உணர்வி (MSM)
    • செவ்வாய்க் கிரக வெளிப்புற நடுநிலை இயைபு மதிப்பீட்டுக் கருவி (MENCA)
    • லைமன் ஆல்பா ஒளிமானி (LAP).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்