ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது, மகாராஷ்டிர அரசின் ‘மஜி வசுந்தரா’ என்ற பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இது சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் ஆற்றலின் நிலையான பயன்பாட்டை நோக்கிய ஒரு முன்முயற்சியாகும்.
‘மஜி வசுந்தரா’ என்பதன் பொருள் ‘எனது பூமி’ என்பதாகும்.
இது மகாராஷ்டிரா அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் முயற்சியாகும்.