நாகாலாந்தின் முதல்வரான நீபியு ரியோ அவர்கள், ‘மஞ்சள் சங்கிலி’ என்ற ஒரு மின் - வணிகத் தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்.
இது உள்ளூர் வணிகம் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதே பெயரில் அலைபேசிச் சேவைகளுக்கான ஒரு செயலியும் வெளியிடப் பட்டு உள்ளது.
இந்தத் தளத்தைப் பயன்படுத்தி எந்தவொரு விற்பனையாளர் அல்லது சேவை வழங்குநர் அல்லது தனிநபர் அல்லது குழு ஆகியோர் இதில் பதிவு செய்து, வாடிக்கையாளர்கள் வாங்குவதற்காக வேண்டி தங்கள் தயாரிப்புகள், திறன்கள் அல்லது சேவைகளை இதில் பதிவேற்றலாம்.