TNPSC Thervupettagam

மணிப்பூரின் முதல் பெண் தலைமை நீதிபதி

February 13 , 2018 2348 days 779 0
  • நீதிபதி அபிலாஷா குமாரி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
  • அம்மாநில ஆளுநர் நஜ்மா-ஹெப்துல்லா, இம்பாலிலுள்ள ஆளுநர் மாளிகையில் நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • இதன் மூலம் இவர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் மற்றும் மூன்றாவது முழு நேர தலைமை நீதிபதியாவார்.
  • இதற்கு முன்னர், இவர் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். இவர், ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் திரு.வீரபத்திரசிங்கின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி அபய்மனோகர் சாப்ரே ஆவார். இம்மாநிலத்தில் உயர்நீதிமன்றம் ஏற்படுத்தப்படுவதற்கு முன் இது கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்