மணிப்பூரில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 03 வரையில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் ஒரு தனித்துவமிக்கக் கொடியேற்ற விழாவினை நடத்தி வருகின்றனர்.
மக்களிடம் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கு முன்பாக அவர்கள் தங்களது தொகுதிகளில் கொடியை ஏற்றுவர்.
இது மணிப்பூரின் ஒரு தனித்துவமிக்க மரபாகும்.
இந்த நடைமுறையானது அனைத்து இனங்கள் அரசியல் கட்சிகள், சமயங்கள் மற்றும் சமூகத்தினராலும் கடைபிடிக்கப் படுகின்றது.