இந்தியாவில் மண் வள ஆரோக்கிய அட்டை என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவு கூரவும், இந்தத் திட்டத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்யவும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டானது மண் வள ஆரோக்கிய அட்டைத் திட்டம் தொடங்கப் பட்ட ஏழாவது ஆண்டைக் குறிக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள ஆரோக்கிய அட்டைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பிரதமர் நரேந்திர மோடி, 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று ராஜஸ்தானில் உள்ள சூரத்கரில் மண் வள ஆரோக்கிய அட்டை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.