கர்நாடக மாநிலச் சட்ட மேலவையில் 'கர்நாடக மதச் சுதந்திர உரிமைப் பாதுகாப்பு மசோதாவானது’ சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகாவின் மதமாற்ற எதிர்ப்பு மசோதா 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதன் சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டது.
நேரடி அல்லது மறைமுக வழிகள் மூலமாக கட்டாய மத மாற்றங்கள் மேற்கொள்ளப் படுவதை இந்த மசோதா தடை செய்கிறது.
இது மத மாற்றத்தை மேற்கொள்வதற்காக சில குறிப்பிட்ட நடைமுறைகளை வழங்கச் செய்கிறது.
இந்தச் சட்டத்தின் கீழ், எந்த ஒரு தனிநபரும் தாங்கள் மதம் மாறுவதற்கு குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் ஒரு அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டும்.