TNPSC Thervupettagam

மத்தியத் தொழிலக் பாதுகாப்புப் படையின் எழுச்சி (நிறுவன) தினம் - மார்ச் 10

March 11 , 2020 1662 days 436 0
  • இந்த ஆண்டு மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையின் (Central Industrial Security Force - CISF) 50வது எழுச்சி தினமானது கொண்டாடப்பட்டது.
  • CISF ஆனது 1969 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • இது இந்தியாவில் மத்திய ஆயுதக் காவல் படையின் (Central Armed Police Force - CAPF) ஒரு பிரிவாகும்.
  • இது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் அல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
  • இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது.
  • CISFன் பொது இயக்குநர் இந்தியக் காவல் பணி அதிகாரியான ராஜேஷ் ரஞ்சன் ஆவார்.
  • இது நாட்டில் இருக்கும் விண்வெளி, அணு ஆயுதம், அரசு மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் அமைப்புகளைப் பாதுகாக்கின்றது.
  • இது பேரழிவு மேலாண்மையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்