மத்திய சேமக் காவல் படை (CRPF) வீர தினம் - ஏப்ரல் 09
April 16 , 2025 4 days 26 0
இந்தத் தினமானது, 1965 ஆம் ஆண்டு குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் என்ற இடத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் முழுப் படையணிக்கு எதிரான போரின் போது, நான்கு CRPF படைகள் வெளிப்படுத்திய இணையற்ற தைரியத்தையும், வீரத்தையும் நினைவு கூருகிறது.
மத்திய சேமக் காவல் படையானது 1939 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, பின்பு ஜூலை 27 ஆம் தேதியன்று அரசப் பிரதிநிதிகளின் காவல்துறையாக நிறுவப்பட்டது.
பின்னர், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று CRPF சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் அப்படை CRPF ஆக மாறியது.