“அனைவருக்குமான வருங்காலம் – மனித வனவிலங்கு சகவாழ்விற்கான அவசியம்” என்று தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது சர்வதேச இயற்கை நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு ஆகியவற்றால் வெளியிடப்படுகிறது.
உலகளவில், உலகின் 75 சதவீத காட்டுப்பூனை வகை உயிரினங்கள் இம்மாதிரியான மோதலால் பாதிக்கப் பட்டு இருக்கின்றன.
1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகின் வனவிலங்கு எண்ணிக்கையானது சராசரியாக 68 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2014-15 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக் கட்டங்களில் பெரும்பாலும் மனித-யானை மோதல் காரணமாக இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப் பட்டுள்ளன.
அதே காலகட்டத்தில் யானைகளுடனான மோதல் காரணமாக 2,361 பேர் இறந்து உள்ளனர்.