ஒடிசா அரசானது புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளரான (Literature) மனோஜ் தாஸ் அவர்களின் நினைவாக “மனோஜ் தாஸ் சர்வதேச இலக்கிய விருதினை” வழங்க உள்ளதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ஆங்கில இலக்கியத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை ஆற்றியதற்காக ஒடிசாவைச் சேர்ந்த இலக்கிய எழுத்தாளர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இந்த விருதானது வழங்கப்படும்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே ஒடியா மற்றும் ஆங்கில இலக்கியங்களைப் பற்றிய ஆர்வத்தை உருவாக்குவதற்காக வேண்டி, உயர் கல்விநிலை மாணவர்களின் ஆக்கப் பூர்வமானப் படைப்புகளுக்கு வேண்டி “மனோஜ்-கிசோர்” இலக்கியத் திறமை விருதானது வழங்கப்படும்.
மனோஜ் தாஸ் அவர்கள் ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல் இயற்றிய புகழ்பெற்ற இந்திய நூலாசிரியராவார்.