ரப்பர் வாரியமானது அசாம் மாநிலத்தில் உலகின் முதலாவது மரபணு மாற்றப்பட்ட ரப்பர் மரத்தின் களச் சோதனையைத் தொடங்கியுள்ளது.
இந்த மரபணு மாற்றப்பட்ட ரப்பரானது கோட்டயத்தின் புதுப்பள்ளியிலுள்ள இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் உயிரித் தொழில்நுட்ப ஆய்வகத்தில் உருவாக்கப் பட்டது.
இது குவஹாத்தியிலுள்ள ரப்பர் வாரியத்தின் சாருத்ரி ஆராய்ச்சிப் பண்ணையில் நடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கேரளாவில் மரபணு மாற்றப்பட்ட ரப்பரை நடுவதற்கான ஒரு களச் சோதனைக்கு கேரள அரசு அனுமதி தர மறுத்து விட்டது.