சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான பிற்படுத்தப்பட்டோர் சட்டம் 2018 என்ற சட்டத்தின் கீழ் மராத்தாச் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மகாராஷ்டிரா அரசின் முடிவை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஆனால் இச்சமூகத்திற்கு மாநில அரசால் வழங்கப்பட்ட 16 சதவிகித இட ஒதுக்கீடு “நியாயமற்றது” (நீதிக்கு முரணானது) என்று கூறியுள்ளது.
உயர் நீதிமன்றம் கல்விக்கு 12 சதவிகித இட ஒதுக்கீட்டையும், அரசு வேலைக்கு 13 சதவிகித இட ஒதுக்கீட்டையும் அளித்து முந்தைய இட ஒதுக்கீட்டு சதவிகிதத்தைக் குறைத்துள்ளது.
கூடுதலாக வழங்கப்பட்ட 12-13 சதவிகித மராத்தா இட ஒதுக்கீடானது, அம்மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீட்டை 64–65 சதவிகிதம் வரை உயர்த்தவுள்ளது. இந்த இட ஒதுக்கீடானது, இந்திரா சௌகானி வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 50 சதவிகித இட ஒதுக்கீட்டை விடவும் அதிகமாக உள்ளது.