ஸ்வான்டே பாபோ என்பவருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான, மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நவீன கால மனிதர்கள், அழிந்து போன அதன் மூதாதையரான நியாண்டர்தால்கள் மற்றும் டெனிசோவன்களுடன் டிஎன்ஏ தொடர்பைக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபித்த அவரது மகத்தானக் கண்டுபிடிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த இந்த அறிவியலாளர் நமது நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் அழிந்து போன நமது மூதாதையர்களுடன் ஒப்பிடும் போது நவீன கால மனித அமைப்பினை எந்த அமைப்பு தனித்துவமாக்குகிறது என்பது பற்றிய முக்கியத் தகவல்களை வழங்கினார்.
ஸ்வான்டே பாபோ 1982 ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற சுனே பெர்க்ஸ்ட்ரோமின் மகன் ஆவார்.