TNPSC Thervupettagam

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

October 3 , 2017 2480 days 842 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி சி ஹால், மைக்கேல் ராஸ்பாஷ் மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் ஆகிய மூன்று மரபியல் (ஜெனடிக்ஸ்) விஞ்ஞானிகளுக்கு உயிரியல் கடிகாரங்களை கட்டுப்படுத்தும் மூலக்கூறு இயக்கவியலை கண்டறிந்ததற்காக நடப்பாண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • தூக்கம், உணவு முறை, ஹார்மோன்கள், மற்றும் உடல் வெப்ப நிலையை முறைப்படுத்தும் உயிரியல் கடிகாரங்கள் (சிர்காடியன் கடிகாரங்கள்) அமைத்தலில் ஜீன்களின் பங்களிப்பை இக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
  • இக்கண்டுபிடிப்பு தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் எப்படி புவியின் சுழற்சிக்கு ஏற்ற வகையில் தங்களின் உயிரிக்காலச் சீர்மைகளை (Biological Rhythms) தகவமைத்துக் கொள்கின்றன என விளக்க உதவும்.
 
  • பழ வண்டுகளின் உடல் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு, உயிரி கடிகாரத்தை இயக்கும்  மரபணுவை  இம்மூவரும் கண்டறிந்துள்ளனர்.
  • நாட்களின் காலச்சீர்மைக்கு ஏற்றவாறு பொருந்திக் கொள்ள உதவும் வகையில் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களில் ஓர் உள்ளமைக்கப்பட்ட காலங்காட்டி (internal timekeeper)  இருப்பதாக விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கருதுகின்றனர்.
  • இவ்வாறு பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை உயிரினங்களின் உடலில் தினந்தோறும் நேரம் தவறாமல் தூண்டுவதற்கு, உடலில் தானாகவே அமைந்துள்ள ஒரு 'உயிரி கடிகாரம்'தான் உதவுகிறது என்பது விஞ்ஞானிகளுக்கு நீண்ட காலமாகவே தெரியும்.
  • மூளையின் சாதாரண செயல்பாட்டிற்கு முக்கியமான தூக்கத்தை சீர்படுத்தலையும் இக்கடிகாரம் மேற்கொள்ளும்.
  • அந்த உயிரி கடிகாரத்தின் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடுகளால் மன அழுத்தம், 'பைபோலார்' எனப்படும் மிகையுணர்வு மனநோய், மறதி நோய், நரம்பியல் நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்