இந்திய மருந்தியல் குறிப்பேடு ஆணையம் (IPC) ஆனது மருந்தியல் குறிப்பேடு கலந்துரையாடல் குழுவில் (PDG) இணைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட தொடக்கக் கட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் ஒரே மருந்தியல் குறிப்பேடு அமைப்பு இந்திய மருந்தியல் குறிப்பேடு ஆணையம் ஆகும்.
மருந்தியல் குறிப்பேடு குழுவானது (PDG) ஆனது 1989 ஆம் ஆண்டில் ஐரோப்பிய, ஜப்பானிய மற்றும் அமெரிக்க மருந்தியல் குறிப்பேடு நிறுவனங்களால் நிறுவப் பட்டது.
உற்பத்தியாளர்கள் மீதான சுமையை குறைப்பதற்கும் நிலையான தரத்தை உறுதி செய்வதற்கும் உலகளாவிய மருந்தியல் குறிப்பேட்டுத் தரநிலைகளை இணக்கம் ஆக்குவதை PDG நோக்கமாகக் கொண்டுள்ளது.
2001 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது ஒரு பார்வையாளர் அமைப்பாக இதில் இணைந்தது.