ஒடிசா மாநிலத்தில், 2022 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதியன்று மாண்டியா திவாஸ்/ (தினை வகைகள் நாள்) தினமானது கொண்டாடப்பட்டது.
இது மாநிலம் முழுவதிலும் தினை சாகுபடி மற்றும் அதன் நுகர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அம்மாநில மக்களின் நிலையை மேம்படுத்தவும், மக்களுக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும் வேண்டி ஒடிசாவில் தினை வகைகள் திட்டமானது தொடங்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2023 ஆம் ஆண்டினை சர்வதேச தினை ஆண்டு என்று அறிவித்துள்ளது.