பத்திரிக்கைத் துறையில் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாக செலுத்தியதற்காக அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தைச் சேர்ந்த 29 பத்திரிக்கையாளர்களுக்கு மாத்ரி ஸ்ரீ ஊடக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மாத்ரி ஸ்ரீ ஊடக விருதுகள் நெருக்கடி நிலைக் காலத்தின் போது ஏற்படுத்தப்பட்டன.
இதன் முதலாவது விருது லாலா ஜகத் நாராயண் என்ற பத்திரிக்கையாளருக்கு வழங்கப்பட்டது.