தொழில் முனைவோருக்கு உதவி வழங்கச் செய்வதற்காக ஹரியானா மாநில அரசு, மாத்ருசக்தி உதய்மிதா என்ற ஒரு திட்டத்தினை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பரிவார் பெச்சான் பத்ராவின் சரிபார்க்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான அளவிலான வருடாந்திரக் குடும்ப வருமானத்தினைக் கொண்டுள்ள பெண்களுக்கு, 3 லட்சம் ரூபாய் வரையிலான மென் கடன்கள் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும்.