TNPSC Thervupettagam

மாநிலங்களின் கடன்

September 17 , 2021 1038 days 499 0
  • பொருளாதாரச் சந்தையிருந்து ரூ.15,721 கோடி அளவில் கூடுதல் நிதியினை கடனாகப் பெறுவதற்கு 11 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்த மாநிலங்கள் 2021-22 ஆம் நிதியாண்டின் ஜுன் வரையிலான காலாண்டுப் பகுதிக்காக நிதி அமைச்சகம் நிர்ணயித்த மூலதனச் செலவின இலக்குகளைப் பூர்த்தி செய்துள்ளன.
  • அவற்றின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.25 சதவீதத்திற்குச் சமமான கூடுதல் பொதுச் சந்தைக் கடன் அனுமதியானது அவற்றிற்கு வழங்கப்பட்டது.
  • மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் மீதான 4 சதவீதத்தின் மொத்த நிகரக் கடன் வரம்பில் 0.50 சதவீதமானது 2022 ஆம் நிதியாண்டின் போது மாநிலங்களுக்கு ஆகும்  அதிகப் படியான மூலதனச் செலவினங்களுக்காக வேண்டி ஒதுக்கப்பட்டது.
  • அந்த மாநிலங்களாவன: ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்