TNPSC Thervupettagam

மாநிலங்களுக்கான நிகர கடன் வரம்புகள் 2023

December 24 , 2023 207 days 180 0
  • மாநில அரசுகள் ஒராண்டிற்கான தங்களது நிகர கடன் வரம்புகளை விட கூடுதலாக 2.04 லட்சம் கோடி ரூபாயை கடனாகப் பெறலாம்.
  • இந்த ஆண்டு சுமார் 61,000 கோடி ரூபாய் கூடுதல் கடன் பெறுவதற்கு 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • இது அவற்றின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3% என்ற நிகர கடன் உச்சவரம்புக்கு மேலாக உள்ளது.
  • தேசிய ஓய்வூதிய திட்டத்திற்குத் தேவையான பங்களிப்புகளை செலுத்துவதன் மூலம் தங்கள் ஓய்வூதியப் பொறுப்புகளைப் பூர்த்தி செய்த மாநிலங்களுக்கு கூடுதல் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், மின்சாரத் துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநில அரசுகள் இந்த ஆண்டு 1.43 லட்சம் கோடி ரூபாய்க்கு சற்று அதிகமாக நிதி திரட்டத் தகுதி பெற்றுள்ளன.
  • 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, இந்த ஆண்டிற்கான சாதாரண நிகர கடன் உச்சவரம்பு 8,59,988 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்