ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியான D. ஜெயச்சந்திரன் என்பவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் (SHRC - State Human Rights Commission) தற்காலிகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.
தமிழ்நாடு SHRC பற்றி
தமிழ்நாட்டில் 17.4.1997 அன்று தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமானது ஏற்படுத்தப் பட்டது.
இது மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993ன் பிரிவு 21ன் கீழ் ஏற்படுத்தப் பட்டது.
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2019ன் படி, SHRCன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 70 வயது பூர்த்தியாகும் வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் நீடிப்பார்கள்.
உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி/நீதிபதியாக இருந்த ஒருவர் SHRCன் தலைவராக நியமிக்கப்படுவார்.