TNPSC Thervupettagam

மாநில வளர்ச்சிக் கடன்கள் - தமிழ்நாடு

April 16 , 2022 829 days 473 0
  • 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 23,500 கோடி ரூபாய் கடன் பெறப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • ஏப்ரல்-ஜூன் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் மாநில வளர்ச்சிக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் மாநில அரசுகள்/ஒன்றியப் பிரதேச அரசுகள் 1,90,375 கோடி ரூபாய் கடன் வாங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2021-22 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒப்பீட்டுக் காலக் கட்டத்தில், தமிழக அரசு 23,450 கோடி ருபாயைக் கடனாகப் பெறுவதாகக் குறிப்பிட்டது.
  • ஆனால் உண்மையில் திரட்டப்பட்ட தொகை சற்று அதிகமாக 24,000 கோடி ரூபாயாக இருந்தது.
  • ICRA லிமிடெட் எனப்படும் மதிப்பீட்டு நிறுவனமானது, 2023 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மகாராஷ்டிரா அதிகபட்சமாக 32,000 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் வாங்கி ள்ளதாக கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்