40 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபா நாட்டின் முதலாவது பிரதமராக மானுவல் மர்ரெரோ குரூஸ் என்பவரை அந்நாட்டின் குடியரசுத் தலைவர் மிகுவல் தியாஸ்-கேனலால் நியமித்துள்ளார்.
பிரதம மந்திரி பதவியானது 1976 ஆம் ஆண்டில் அப்போதைய புரட்சிகரத் தலைவரும் கியூபாவின் கடைசிப் பிரதம மந்திரியுமான பிடல் காஸ்ட்ரோவால் நீக்கப்பட்டது.
கியூபாவில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் கீழ் பிரதமர் பதவி மீண்டும் நிலை நிறுத்தப் பட்டுள்ளது.