இந்தியா தற்போது ‘மானேசர் பயங்கரவாத எதிர்ப்பு 2022’ என்ற பலதரப்பு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தி வருகிறது.
இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் (RATS) கட்டமைப்பின் கீழ் நடத்தப்படுகிறது.
பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (RATS) ஆனது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்புகளில் ஒன்றாகும்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் அதன் தலைமையகம் அமைந்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் நோக்கம் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதாகும்.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைமைப் பதவியை இந்தியா ஏற்றுக் கொண்டது.