வணிக ரீதியாக கிடைக்கப் பெறும் உணவுப் பொருட்களில் உள்ள மாறுபக்கக் கொழுப்புகளின் தீமையான விளைவுகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செயல் நடவடிக்கையை கேரளாவின் சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.
மேலும் மாறுபக்கக் கொழுப்புகளுக்கென்று தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான தகுதிநிலைகளை அவை பூர்த்தி செய்வதற்காக உள்ளூர் உணவு உற்பத்தி தொழிற்சாலைகளை அந்த செயல் நடவடிக்கை ஊக்குவிக்கின்றது.
இந்த ஓராண்டு கால செயல்திட்டமானது பின்வரும் குறிப்பிட்ட இலக்குகளின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
உணவு வணிக நிறுவனங்களிடையே மாறுபக்கக் கொழுப்பு மற்றும்
உணவு வகைகளை மாறுபக்கக் கொழுப்பற்ற வகையில் எவ்வாறு பாதுகாப்பது குறித்து அறிவியல்பூர்வ அமர்வுகள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்.
உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி,
மாறுபக்கக் கொழுப்பு உட்கொள்ளுதலானது மொத்த ஆற்றலை எடுத்துக் கொள்ளுதலில் 1 சதவிகிதத்திற்குக் கீழ் இருக்க வேண்டும்.
இது 2023 ஆம் ஆண்டில் உலக உணவு விநியோகித்தலில் மாறுபக்கக் கொழுப்பை முழுமையாக ஒழித்தலை ஏற்படுத்த எண்ணுகின்றது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையமானது (Food Safety and Standards Authority of India - FSSAI) உணவில் மாறுபக்கக் கொழுப்பின் வரம்பு 2 சதவிகிதம் என பரிந்துரைத்துள்ளது. மேலும் இது 2022 ஆம் ஆண்டில் உணவிலிருந்து மாறுபக்கக் கொழுப்பை ஒழிக்க எண்ணுகின்றது.