அறிவியலாளர்கள் சமீபத்தில், மாலத்தீவில் ஒரு ‘மாறுபட்ட மண்டலத்தினை’ கண்டுபிடித்தனர்.
இந்த மாறுபட்ட மண்டலம் என்பது கடலின் மேற்பரப்பிற்கு அடியில் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வகையில் இது ஒரு புதிய சுற்றுச்சூழல் அமைப்பாகும்.
இது 'பெருங்கடலின் சோலை' என்று குறிப்பிடப்படுகிறது.
ஒமேகா சீமாஸ்டர் II என பெயரிடப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலில் பொருத்தப்பட்ட ஒளிப்படக் கருவியைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் இந்த சுற்றுச்சூழல் அமைப்பைக் கண்டறிந்தனர்.
மைக்ரோ-நெக்டன் போன்றவற்றை உண்ணும் சுறாக்கள் மற்றும் பிற பெரிய கடல் மீன்கள் போன்ற பல பெரிய அளவிலான வேட்டையாடி உண்ணும் விலங்குகள் அங்கு இருப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.
மாலத்தீவைச் சுற்றியுள்ள ஆழ்கடலில் இவ்வளவு பன்முகத்தன்மை கொண்ட சுறா இனங்கள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத் தக்கதாகும்.