சமீபத்தில், 2வது “2022ஆம் ஆண்டில் மாவட்டத் திறன் மேம்பாட்டுத் திட்டமிடலில் சிறந்து விளங்குவதற்கான விருதுகள்” வழங்கும் ஒரு விழாவானது ஏற்பாடு செய்யப் பட்டது.
திறன் மேம்பாட்டில் கொண்டு வரப்பட்ட புதுமையான சிறந்த நடைமுறைகளுக்காக, முதல் 30 மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ராஜ்கோட் (குஜராத்), கச்சார் (அசாம்) மற்றும் சதாரா (மகாராஷ்டிரா) ஆகியவை முறையே முதல் மூன்று மாவட்டங்களாக இடம் பெற்றுள்ளன.
இந்த விருதுகள் சங்கல்ப் திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் நிறுவப் பட்டன.
SANKALP என்பதன் விரிவாக்கம், "வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன் கையகப் படுத்துதல் மற்றும் அறிவுசார் விழிப்புணர்வு" என்பதாகும்.