TNPSC Thervupettagam

மிகப்பெரிய அளவிலான வங்கிகள் ஒருங்கிணைப்புத் திட்டம்

March 31 , 2020 1574 days 541 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து அரசிற்குச் சொந்தமான 10 வங்கிகளை 4 வங்கிகளாக ஒருங்கிணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்றது.
  • மத்திய ரிசர்வ் வங்கிச் சட்டமானது பொது நலன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்ள இந்திய அரசிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்த அதிகாரத்தின் மூலம், மத்திய நிதித் துறை அமைச்சர் இந்த ஒருங்கிணைப்புத் திட்டத்தை முன்மொழிவார். இந்தத் திட்டமானது மத்திய ரிசர்வ் வங்கியினால் ஒப்புதல் அளிக்கப்படும்.

இதுபற்றி

  • இந்தத் திட்டத்தின் படி, இந்திய யுனைடெட் வங்கி மற்றும் ஒரியண்டல் வணிக வங்கி ஆகியவை பஞ்சாப் தேசிய வங்கியுடன் இணைக்கப்பட இருக்கின்றது.
  • சிண்டிகேட் வங்கியானது கனரா வங்கியுடன்  ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றது. 
  • அலகாபாத் வங்கியானது இந்திய வங்கியுடன் ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றது.
  • மேலும், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேசன் வங்கியானது இந்திய யூனியன் வங்கியுடன் இணைக்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்