கேரளாவின் செங்கல் கிராமத்தில் உள்ள மகேஸ்வரம் ஸ்ரீ சிவ பார்வதி கோயிலில் 111.2 அடி கொண்ட சிவலிங்கமானது இந்தியாவில் இருக்கும் இது போன்ற ஒரு உயரமான அமைப்பிற்காக இந்திய சாதனைப் புத்தகப் பதிவில் இடம் பிடித்துள்ளது.
இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால், உயரம் மற்றும் அகலத்தின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சிவலிங்கமாக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும்.
தற்போது, இச்சாதனையானது கர்நாடகாவின் கோலாரில் உள்ள கோட்டிலிங்கேஸ்வரர் கோயிலிடம் உள்ளது. இதன் உயரம் 108 அடி (33 மீ) ஆகும்.