TNPSC Thervupettagam

மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி ஆலைத் திட்டம்

July 6 , 2022 747 days 447 0
  • தேசிய அனல்மின் கழகத்தினால் தெலுங்கானாவில் உள்ள இராமகுண்டத்தில் அமைக்கப் பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையமானது முழுமையாக இயங்கத் தொடங்கியது.
  • இந்த சூரிய மின் உற்பத்தி ஆலையின் திறன் 100 மெகாவாட் ஆகும்.
  • இது மேம்பட்டத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான சில அம்சங்களுடன் இயங்குகிறது.
  • இதில் மிதக்கும் சூரியசக்தி மின் தகடுகள் இருப்பதால் நீர்நிலைகளில் இருந்து நீர் ஆவியாதல் வீதம் குறைக்கப்படும்.
  • இதனால், நீர்வளங்காப்பு நோக்கத்திற்கு இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்