கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் உயர் பாதுகாப்பு நுழைவாயில் மற்றும் வணிக வகுப்பு அதிவேக விமான முனையம் ஆகியவற்றினை கேரள முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
இதன் மூலம், தனியார் அதிவேக விமான முனையத்தைக் கொண்டுள்ள நாட்டின் நான்காவது விமான நிலையமாக கொச்சி விமான நிலையம் மாறியுள்ளது.
இரண்டு மாபெரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயண முனையங்களுடன், கொச்சின் சர்வதேச விமான நிலைய நிறுவனமானது (CIAL) தற்போது நாட்டின் மிகப்பெரிய வணிக அதிவேக விமான முனையத்தினைக் கொண்டுள்ள விமான நிலையமாக மாறி உள்ளது.