மத்திய உள்துறை அமைச்சகமானது சமீபத்தில் ஒரு மக்கள்தொகை குறித்த ஒரு கணக்கெடுப்பினை மேற்கொண்டது.
இந்தத் தரவுகளின்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தான் குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு அதிக எண்ணிக்கையில் திருமணம் செய்து வைக்கப் படுவதாக பதிவாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், 18 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையானது அதிகபட்சமாக 5.8 சதவீதமாக உள்ளது.
18 வயதை அடையும் முன் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 1.9% ஆகவும், கேரளாவில் 0.0 % முதல் ஜார்க்கண்டில் 5.8 % வரையிலும் பதிவாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதிவாகும் குழந்தை திருமணங்கள் கிராமப்புறங்களில் 7.3 சதவீதமும், நகர்ப்புறங்களில் மூன்று சதவீதமும் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் 21 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப் படுகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் 54.9 சதவீதப் பெண்கள் 21 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்ற நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இது 54.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.