TNPSC Thervupettagam

மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில தினம் - பிப்ரவரி 20

February 22 , 2020 1681 days 619 0
  • 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று, மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை முறையே இந்திய ஒன்றியத்தின் 23 மற்றும் 24வது மாநிலங்களாக (புதிய 2 மாநிலங்கள்) உருவாகியுள்ளன.

மிசோரம்

  • வடகிழக்கு மறுசீரமைப்புச்  சட்டம், 1972 ஆனது அமல்படுத்தப்பட்டதன் மூலம் மிசோரமானது ஒரு ஒன்றியப் பிரதேசமாக மாறியுள்ளது.
  • மிசோரம் மாநிலச் சட்டம், 1986 ஆல் மிசோரத்திற்கு மாநில உரிமை வழங்கப் பட்டுள்ளது.
  • தலைநகரம்: அய்ஸ்வால்
  • பாலின விகிதம்: 1000 ஆண்களுக்கு 975 பெண்கள் (தேசிய அளவு: 943/1000)
  • கல்வியறிவு: 91.58% (தேசிய அளவில்: 74.04%)
  • மிசோரம் மாநிலமானது தனது சர்வதேச எல்லையை மியான்மர் மற்றும் வங்க தேசத்துடன் பகிர்ந்து கொள்கின்றது.
  • இந்தியாவின் வனங்களின் நிலை குறித்த அறிக்கை - 2019ன் படி, மிசோரம் மாநிலமானது தனது மொத்தப் புவியியல் பரப்பளவில் 85.4 சதவீதம் என்ற அளவில் அதிகபட்ச வனப்பகுதியைக் கொண்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசம்

  • இந்தப் பகுதியானது 1972 ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்தின் ஒன்றியப் பிரதேசமாக மேம்படுத்தப்பட்டது.
  • அருணாச்சலப் பிரதேசத்திற்கு 1986 ஆம் ஆண்டின் அருணாச்சலப் பிரதேச மாநிலச் சட்டத்தினால் 1987 ஆம் ஆண்டில் மாநில உரிமை வழங்கப்பட்டது.
  • தலைநகரம்: இட்டாநகர்
  • பாலின விகிதம்: 1000 ஆண்களுக்கு 938 பெண்கள்  (தேசிய அளவு: 943/1000)
  • கல்வியறிவு: 65.38% (தேசிய அளவில்: 74.04%)
  • அருணாச்சலப் பிரதேசமானது பூடான், சீனா மற்றும் மியான்மருடன் சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றது.
  • இது வடகிழக்கு பிராந்தியத்தில் மிகப் பெரிய மாநிலப் பகுதியாக விளங்குகின்றது. இது அசாம் மாநிலத்தை விடவும் பெரியதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்