இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான மிதாலி ராஜ் அனைத்து வகையான சர்வதேசக் கிரிக்கெட் விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர் ஆவார்.
இவர் 2005 ஆம் ஆண்டு முதல் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.
2005 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட ICC ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்த ஒரே பெண் கிரிக்கெட் வீராங்கனை இவர் ஆவார்.
2019 ஆம் ஆண்டில் சர்வதேசக் கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் பெண் என்றப் பெருமையையும் இவர் பெற்றார்.
மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்த ஒரே பெண் கிரிக்கெட் வீராங்கனை இவரேயாவார்.
இவர் அனைத்துக் கிரிக்கெட் வடிவங்களிலும் 10,000 சர்வதேச ரன்களைக் கடந்த முதல் இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்றப் பெருமையினையும் பெற்றார்.