TNPSC Thervupettagam

மின்னணு மருந்தகத்தால் விற்கப்படும் மருந்துகள் மீதான வரைவு விதிகள்

September 4 , 2018 2149 days 604 0
  • இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலமான மருந்து விற்பனையை முறைப்படுத்துவதற்காக மின்னணு மருந்தகத்தால் விற்கப்படும் மருந்துகள் மீதான வரைவு விதிகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இது, நம்பகத்தன்மை கொண்ட ஆன்லைன் தளங்களிலிருந்து கிடைக்கப்பெறும் உண்மையான மருந்துகள் நோயாளிகளுக்குச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வரைவு விதிகளின்படி, பதிவு செய்யாமல் எந்தவொரு நபராலும் மின்னணு மருந்தகத்தின் மூலமாக மருந்துகளை விற்பனை செய்யவோ அல்லது விநியோகிக்கவோ, கையிருப்புக் கொள்ளவோ (வைத்திருக்கவோ), காட்சிப்படுத்தவோ கூடாது.
  • இந்தப் புதிய வரைவு விதிகளானது, மின்னணு மருந்தகங்களை மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்புடன் பதிவு செய்யவும் ஆன்லைன் தளத்தின் மூலமாக வர்த்தக உரிமம் பெறவும் வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்