வடகிழக்கு மாநிலங்களில் மின்னணு முறை கொள்முதல் நடைமுறைகளை மேற் கொள்வதில் சிறந்த மாநிலத்திற்கான விருதை திரிபுரா பெற்றுள்ளது.
அரசின் வெளிப்படைத் தன்மையைப் பேணச் செய்வதற்காக என்று ரூ.25,000க்கும் அதிகமான மதிப்பைக் கொண்ட எந்தவொரு கொள்முதல் அல்லது ஒப்பந்தத்தையும் மின்னணு முறையில் கொள்முதல் செய்வதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
மின்னணு முறை கொள்முதல் மற்றும் அரசு மின்னணுச் சந்தைத் தளம் (GeM) மூலம் செலுத்தப் பட்ட மொத்த மதிப்பு 2020-21 ஆம் ஆண்டில் ரூ.4,451 கோடியிலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் ரூ.7441 கோடியாக அதிகரித்துள்ளது.