இந்தியா-கொரியா மின்னணு மூலத் தரவுப் பரிமாற்ற அமைப்பு (EODES) ஆனது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பு இந்தியா-கொரியா விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தை (CEPA) சுமூகமாகச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சுங்க ஒத்துழைப்பை மேம்படுத்துதல், தரவு பரிமாற்றத்தை தானியக்கமாக்கச் செய்தல், சர்வதேசச் சுங்க ஒத்துழைப்புச் செயல் முறையில் உலகளாவியத் தரத்தை அமைத்தல் ஆகியவற்றை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.