பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் SVAMITVA என்ற திட்டத்திற்கு, 2023 ஆம் ஆண்டு மின் ஆளுகைக்கான (தங்கம்) மதிப்பு மிக்க தேசிய விருது வழங்கப் பட்டுள்ளது.
இது 26வது தேசிய மின் ஆளுகை மாநாட்டில் (NCeG) குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதற்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஒரு பயன்பாடு என்பதன் கீழ் வழங்கப் படுகிறது.
SVAMITVA என்பது ‘ஒரு மேம்படுத்தப்பட்டத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மேற் கொள்ளப் படும் கிராமங்கள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளின் மீது வரைபடமாக்கல்’ என்பதன் சுருக்கமாகும்.
மின் ஆளுகைக்கான தேசிய மாநாடு (NCeG) என்பது, ‘விக்சித் பாரத், குடிமக்களுக்கு அதிகாரமளித்தல்’ என்ற கருத்துருவில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
தேசிய மின் ஆளுகை விருதுகள் பின்வரும் 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன