அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் இது மின் கழிவுகளை உற்பத்தி செய்பவர்கள், தயாரிப்பாளர்கள், புதுப்பிப்பவர்கள், அகற்றுபவர்கள் மற்றும் மறு சுழற்சி செய்பவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
உலகளாவிய மின்-கழிவு கண்காணிப்பு அறிக்கை 2020 என்பதின் படி, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மின்-கழிவு உற்பத்தியாளர் ஆகும்.
மின்-கழிவு என்பது மின்னணு மற்றும் மின் சாதனங்களின் அனைத்துப் பொருட்களையும், அவற்றின் உரிமையாளரால் மறுபயன்பாட்டின் நோக்கமின்றி கழிவுகளாக நிராகரிக்கப்பட்ட பகுதிகளையும் குறிக்கிறது.
மின்-கழிவு மேலாண்மை விதிகள் 2016 என்பதின் கீழ், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பை ஒரு நிறுவனம் கடைபிடிப்பது கட்டாயமாகும்.
இதில், விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புச் சான்றிதழ்கள் (கார்பன் கிரெடிட் பொறிமுறையைப் போன்றது) மூன்றாம் தரப்பினருக்கு மின்னணு கழிவுப் பொறுப்பை ஈடுகட்ட அனுமதிக்கும்.
மின் மற்றும் மின்னணு உபகரணங்களை தயாரிப்பதில் அபாயகரமான பொருட்களை (ஈயம், பாதரசம் மற்றும் காட்மியம் போன்றவை) பயன்படுத்துவதை இது கட்டுப் படுத்துகிறது.
இது மின்னணுப் பொருட்களின் உள்ளடக்கும் வரம்பை அதிகரிக்கிறது எ.கா., மடிக் கணினிகள், மொபைல், கேமராக்கள் போன்றவை.
மின்னணுப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் முறையே 70% மற்றும் 80% ஆக அதிகரிப்பு இலக்குகளுடன் 2023 ஆம் ஆண்டுக்குள் குறைந்த பட்சம் 60% மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப் படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அவர்களின் இலக்கை அடையாத நிறுவனங்களால் 'சுற்றுச்சூழல் இழப்பீடு' வழங்கப் பட வேண்டும்.