காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்காக “மிலாப்” என்ற ஒரு நடவடிக்கையை தில்லி காவல்துறையின் குற்றவியல் பிரிவு நடத்தியுள்ளது.
இது காணாமல் போன 333 குழந்தைகளை தில்லியில் மீட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் அந்தக் குழந்தைகளின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தக் குழந்தைகள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணாமல் போயுள்ளனர். அந்தக் குழந்தைகள் தில்லியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
தில்லி காவல் துறையின் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவானது 2014 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.