உத்தரகாண்ட் காவல் துறையானது “மிஷன் ஹவுஸ்லா” எனப்படும் ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளது.
கோவிட்-19 தொற்றினால் பாதித்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் பிளாஸ்மா ஆகியவற்றைப் பெற உதவுவதே இதன் நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக ரேஷன் பொருட்களைப் பெறுதல், அவசர ஊர்திச் சேவையை ஏற்பாடு செய்தல் மற்றும் இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்தல் போன்றவற்றில் காவல் துறையானது பொது மக்களுக்கு உதவி செய்யும்.