பிரபல ஒடியா மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளர் மனோஜ் தாஸ் என்பவர் இந்திய மற்றும் உலகளாவிய மொழி எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிஸ்டிக் கலிங்கா இலக்கிய விருதினைப் பெற இருக்கின்றார்.
எழுச்சியூட்டும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களை அங்கீகரித்து, அவர்களைப் போற்றுவதற்காக மிஸ்டிக் இலக்கிய விருதானது நிறுவப்பட்டுள்ளது.
இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2020 ஆம் ஆண்டில் பத்ம பூஷண், 2001 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ, சரஸ்வதி சம்மன் மற்றும் சாகித்ய அகாடமி விருது ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.