TNPSC Thervupettagam

மீன் பிடி மற்றும் மீன் வளர்ப்பு மேம்பாட்டு நிதி (FAIDF)

October 30 , 2018 2090 days 669 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்காக (Fisheries and Aquaculture Infrastructure Development Fund) FAIDF எனும் மீன்பிடித் துறை மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற நிதியை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்போதைய உற்பத்தியான 11.4 மில்லியன் டன்களில் இருந்து மீன் உற்பத்தியை கீழ்க்காணும் உற்பத்தி இலக்கிற்கு அதிகரிப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும். அவையாவன
    • 2020 ல் 15 மில்லியன் டன்கள் மீன் உற்பத்தி
    • 2022-23 ஆண்டுகளில் 20 மில்லியன் டன்கள் மீன் உற்பத்தி
  • இந்த இலக்கை அடையும் குறிக்கோளானது நீலப் புரட்சியின் கீழ் அமைக்கப்பட்டது.
  • இந்த நிதிக்கான முதன்மை நிறுவனங்களாக வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) தேசிய கூட்டுறவு அபிவிருத்திக் கழகம் (NCDC - National Cooperatives Development Corporation) மற்றும் பட்டியலிடப்பட்ட வங்கிகள் ஆகியவை செயல்படும்.
  • இந்த நிதியானது முதன்மை கடன் நிறுவனங்கள் மூலம் (NLE - Nodal Loaning Entities) திரட்டப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்