TNPSC Thervupettagam

மீராபாய் சானு – வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்

July 27 , 2021 1090 days 486 0
  • மீராபாய் சானு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
  • மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் சீனாவில் சிஹூய் ஹூ (Zhihui Hou) என்பவர் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
  • அவர் மொத்தம் 210 கிலோகிராம் எடையைத் தூக்கினார்.
  • இந்தோனேசிய நாட்டின் வின்டி கேன்டிகா ஆய்சா என்பவர் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
  • சானு இப்போட்டியில் மொத்தம் 202 கிலோகிராம் எடை வரை தூக்கி இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • கர்ணம் மல்லேஸ்வரியை அடுத்து ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இரண்டாவது இந்தியப் பளு தூக்கும் வீராங்கனை எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • 115 கிலோகிராம் எடையை எந்தவொரு தடையுமின்றி வெற்றிகரமாக தூக்கி ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையை மீராபாய் சானு படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்