இந்தியாவில் முதன்முறையாக முக்கிய மற்றும் மூலோபயக் கனிமங்களை ஏலம் விடுவதற்கான செயல்முறையானது மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசானது 1957 ஆம் ஆண்டு சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தினை (MMDR) 2023 ஆம் ஆண்டு MMDR திருத்தச் சட்டம் மூலம் திருத்தியமைத்துள்ளது.
இதன் கீழ், 24 முக்கிய மற்றும் மூலோபயக் கனிமங்கள் 1957 ஆம் ஆண்டு MMDR சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், திருத்தப்பட்ட இந்த சட்டமானது இந்த கனிமங்களின் தொகுதிகளை ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
இந்தத் தொகுதிகளின் ஏலத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கும்.
அவை பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், ஒடிசா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் முழுவதும் அமைந்துள்ளன.
இந்தியாவில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கர் என இரண்டு இடங்களில் லித்தியம் படிவு தொகுதிகள் உள்ளன.
முதன்முறையாக லித்தியம் தாது சுரங்க உரிமைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு உள்ளது.
எனினும் தனது செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன், உரிமதாரர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதிகள், கிராம சபை ஒப்புதல் மற்றும் பிற உள்ளிட்ட 15 ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை தனியார் நிறுவனங்கள் பெற வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, லித்தியம், நிக்கல் மற்றும் தாமிரத்திற்காக பெருமளவில் இறக்குமதியையே இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது.