TNPSC Thervupettagam

முஜிப்நகர் தினம்

April 18 , 2019 1991 days 429 0
  • ஏப்ரல் 17 அன்று வங்காள தேசமானது முஜிப்நகர் தினத்தை அனுசரித்தது.
  • வங்காளத்தின் அவாமி லீக்கை நிறுவியவரான ஷேக் முஜிபூர் ரகுமான் என்பவர் 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று கைது செய்யப்பட்டு பாகிஸ்தானிற்கு நாடு கடத்தப்பட்டார்.
  • அதன் பின்னர் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பைதியாநாத்தலாவில் ஒன்று கூடி வங்காள தேசத்தின் மாகாண அரசாங்கத்தை உருவாக்க முடிவு செய்தனர்.
  • இந்த நிகழ்ச்சியானது வங்காள தேசம் சுதந்திர நாடாக உருவாக வழிவகுத்தது.
  • இந்த வரலாற்று நிகழ்ச்சியை நினைவு கூர்வதற்காக 1998 ஆம் ஆண்டு முன்னாள் மாம்பழத் தோட்டமான பைதியாநாத்தலாவானது முஜிப்நகர் எனப் பெயர் மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்